பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவிப்பு
நிவாரணப் பணிகளை சீராகவூம் கிரமமாகவூம் துரிதமாகவூம் மேற்கொள்வதற்காக சம்பந்த்ப்பட்ட பிரதேச அரச ஊழியர்களின் விடுமுறைகளை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி வெள்ளம் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்ட அரச உத்தியோகத்தர்களின் சேவைகள் அத்தியவசிய சேவைகளாக கருதப்படுகின்றன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட சகல மாவட்டங்களிலும் கடமைபுரியும் அரசாங்க ஊழியர்களின் விடுமுறைகள் யாவும் மார்ச் 31ம் திகதி வரை ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கான சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட மாகாண சகல தலைமை அதிகாரிகளுக்கும் இவ்வறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமான காரணங்களுக்காக விடுமுறை எடுக்க நேரும் அரச ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணங்களை ஒப்புவித்துஇ சம்பந்தப்பட்ட அரச நிறுவனத்தின் தலைவர்களின் அனுமதி யுடனேயே விடுமுறைகளைப் பெற முடியும் எனவும் அச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் எதுவித இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். (எஸ்.டி.எம்.ஐ.12.00)







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...