தனிநபர் வழங்கிய அதிகூடிய நன்கொடை
முதற்தடவையாக பெண்மணி ஒருவர் பெருமளவிலான தொகை ஒன்றை அரச வைத்தியசாலை ஒன்றுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார்.
கடவத்தை மகரவில் வசிக்கும் மாலனி ஆரியரத்ன என்ற கோடீஸ்வரப் பெண்மணி 46 கோடி ரூபா பெறுமதியான காணி வீடு மற்றும் கட்டடங்கள் அடங்கலான சொத்துக்களை ராகம போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
குறிப்பிடப்பட்ட கோடீஸ்வரப் பெண்மணி நன்கொடை சொத்துக்களுக்கான உறுதிப்பத்திரங்களை சுகாதார அமைச்சில் வைத்து அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்றுக் கையளித்தார்.
இலங்கையில் செல்வந்தர்களால் அரச வைத்தியசலை ஒன்றுக்க வழங்கப்பட்டுள்ள அன்பளிப்புக்களில் ஆகக்கூடிய நன்கொடை இவை என சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இப்பெண்மணி ராகம போதனா வைத்தியசலைக்கு அண்மையில் சிகிச்சை பெறச் சென்றிருந்த சமயம் அந்த ஆஸ்பத்திரியின் பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரியவை சந்தித்து தம்மிடம் இருக்கும் 46 கோடி ரூபா பெறுமதியான காணி வீடு மற்றும் கட்டடங்கள் அடங்களான சகல சொத்துக்களையும் இந்த வைத்தியசலைக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார்.
அதற்கேற்பவே அவர் இதனை வழங்கியுள்ளார். (எஸ்.டி.எம்.ஐ.09.30)







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...