Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here Category Table தக்காளி இறக்குமதி குறித்து விசாரணை நடத்தவும் !

தக்காளி இறக்குமதி குறித்து விசாரணை நடத்தவும் !

  • PDF
tomato

ஜனாதிபதி   பணிப்புரை

வெளிநாட்டிலிருந்து  தக்காளி இறக்குமதி செய்யப்பட்டிருப்பது குறித்து  உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சரைக் கேட்டுள்ளார்.

வாராந்த அமைச்சரவை மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற போது  வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் தக்காளி இறக்குமதி செய்யப்பட்டிருப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போதே வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இவ்வாறு அறிவூறுத்தியதாக அமைச்சரவையின் பதில் பேச்சாளரும் சுற்றாடல் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்று கூறினார்.

அமைச்சர வையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்படி தகவல்களைக் கூறினார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் தக்காளி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கென ஏற்பாடுகள் உள்ளன. அந்த ஒழுங்கு விதிகளை மீறியே தக்காளி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணத்தினால் தான் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என்றார்.  (எஸ்.டி.எம்.ஐ.10.30)