Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here Category Table ஹஜ் யாத்திரிகர் எண்ணிக்கையை 8000 ஆக அதிகரிக்க முயற்சி!

ஹஜ் யாத்திரிகர் எண்ணிக்கையை 8000 ஆக அதிகரிக்க முயற்சி!

  • PDF
haj

அமைச்சர் பெளஸி சவூதியூடன் பேச்சுவார்த்தை

இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ் யாத்திரை செல்வதற்கான வாய்ப்பை 8000 பேருக்கு பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை அமைச்சர் பௌசி மேற்கொண்டு வருகின்றார்.

அதற்கேற்ப  அமைச்சர் பெளஸி  இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரை செல்வோருக்கான  கோட்டாவை 8 ஆயிரமாக அதிகரிக்க வேண்டுமென  சவூதி அரேபிய ஹஜ் விவகாரங்களுக்கான  அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை ஹஜ் குழுவுக்குத் தலைமைதாங்கும் அமைச்சர் பெளஸி எதிர்வரும 27ம் திகதி சவூதி அரேபிய அமைச்சருடன் இது தொடர்பாகப் பேசவுள்ளார்.

ஹஜ் முகவர்கள் மத்தியில் பேசிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சவூதி அமைச்சர் டொக்டர் புவாட்பின் அப்துல் சலாம் அல் பரிஸியிடம் கடந்த ஆண்டு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 2800 ஆக இருந்த யாத்திரிகர்களின் எண்ணிக்கை  5800 ஆக அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயத்தில் இலங்கையிலுள்ள சவூதி அரேபியத் தூதுவரும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறாரென அமைச்சர் பெளஸி கூறினார்.

சில சக்திகள் இந்த விடயத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி பிரிவை உருவாக்க முயல்கின்றன எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹஜ் குழு அங்கத்தவர்கள் பொறுப்புணர்வு டனும்  கெளரவத்துடனும் நடந்துகொள்வார்களென தான் நம்புவதாகக் கூறினார்.

இதேவேளை  பான்கி மூனின் நிபுணத்துவக் குழுவின் அறிக்கையை ஹஜ் முகவர்கள் ஏகமனதாகக் கண்டித்தனர். இது நாட்டினதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலென அமைச்சர் பெளஸி தலைமையிலான இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (எஸ்.டி.எம்.ஐ.10.00)