Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here செய்திகள் இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் முஸ்லிம்களுக்கும் வீடுகள்!

இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் முஸ்லிம்களுக்கும் வீடுகள்!

G.A_chandrasiri

வட மாகாண ஆளுநர்  உறுதி

வன்னி மாவட்டத்தில் மீளக்குடியேற்றப்படும் முஸ்லிம் மக்களின் உட்கட்டமைப்பு ஏற்பாடுகள் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு  காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி உறுதியளித்துள்ளார்.

முஸ்லிம் பிரதிநிதிகளை வட மாகாண ஆளுநரை சந்தித்த போதே அவர் இந்த உறுதிமொழியை வங்கியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு வீடுகள் பாரபட்சமின்றி பகிர்ந்தளிக்கப்படவிருப்பதாகக் கூறினார்.

வடக்கின் வசந்தம் செயல்திட்டத்தின் கீழ் மின்சார இணைப்புகளுக்காக விண்ணப்பித்தோருக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.

மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர பிரிவில் கல்வி கற்பிக்கும் தொண்டர் ஆசிரியர்கள் ஐவருக்கு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மன்னார் உப்புக்குளம் கோந்தப்பிட்டி மீனவர் வாடியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும்  இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டது(எம்.ரி-077)