சுங்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட 8 கோடியே 17 லட்சத்து 68000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு பண நோட்டுக்களை விமான நிலைய சுங்கப் பிரிவினர் நேற்று கைப்பற்றினர்.
நேற்று அதி காலை 1.10க்கு புறப்பட்டுச் செல்வதற்காக வந்த நபரிடம் இருந்தே மேற்படி வெளிநாட்டு பண நோட்டுக்களை சுங்கப் பிரிவினர் கைப்பற்றினர்.சுங்கத் திணைக்களத்தின் வரலாற்றில் இதுவே முதற் தடவையாக இவ்வாறு பெருந்தொகையான வெளிநாட்டு பண நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் மாலி பியசேன தெரிவித்தார்.
அம்பாந்தோட்டையைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு பண நோட்டுக்களை கடத்த முற்பட்டதாகவும் இதற்கு முன்னர் இவர் மூன்று தடவைகள் வெளிநாட்டு கரண்சி நோட்டுக்களை கடத்தியுள்ளதாகவும் மாலி பியசேன தெரிவித்தார். (எஸ்.டி.எம்.ஐ)




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...