ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகைக்கு சென்ற பின்னரே அலரி மாளிகை பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்டது. அங்கு வரும் மக்களுக்கு விருந்துபசாரம் அளிப்பது ஜனாதிபதி அவர்களின் குடும்ப விருந்தோம்பல் பண்பு என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார்.
அலரி மாளிகைக்கு வரும் பொதுமக்களுக்கோ அல்லது விருந்தினர்களுக்கோ பொதுமக்களின் பணத்திலிருந்து ஜனாதிபதி அவர்கள் விருந்துபசாரம் அளிக்கவில்லை.
எதிர்வரும் வரவு - செலவுத் திட்ட வரைவு தொடர்பாக தினமும் ஜனா திபதி பொது அமைப் புகள் தொழிற்சங்கங்கள்- அமைச்சு அதிகாரிகள் திணைக்களங்கள் போன்றவற்றுடன் பேச்சு நடத்து வதுடன் அவர்களது ஆலோசனைக ளையும் பெற்று வருகிறார்.
தேர்தல் ஒன்று வருகிறது என் பதற்காக ஜனாதிபதி அவர்கள் தனது எல்லா கடமைகளையும் நிறுத்திவிட முடியுமா?
ஜனாதிபதி அவர்களை சந்திக்க வருபவர்களுக்கு விருந்துபசாரம் செய்வது அவரது பரம்பரை பரம் பரையாக வந்த விருந்தோம்பல் பண்பு என்பதை யாவரும் அறி வார்கள்.
ஆனால் இன்று சிலர் இதனை அரசியலாக்கிக் கொள்ள முயன்று வருகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டி னார்.
அலரி மாளிகை இன்று விருந்து பசாரம் செய்யும் இடமாக மாறி விட்டது என ஐ. தே. க. செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளி க்கும் வகையிலேயே அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(vk;.up-977)







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...