மாத்தறையிலிருந்து கொழும்பு வரும் அரச ஊழியர்களுக்கு மட்டும்
ரயில் பாதை திருத்த வேலை காரணமாக மாத்தறையிலிருந்து ரயில் மூலம் கொழும்பு வரும் அரச ஊழியர்களுக்கு கடமை நேரத்தில் 30 நிமிட சலுகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி காலையில் 15 நிமிட தாமதித்து கடமைக்கு வருவதற்கும் 15 நிமிடத்துக்கு முன்னர் வீடு திரும்புவதற்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசேட சுற்றறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து இந்த சலுகை நடைமுறைக்கு வந்துள்ளதுடன் மாத்தறை- கொழும்புக்கு இடையிலான ரயில் பயண பருவச் சீட்டுக்களை வைத்துள்ளோருக்கே இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.
காலி- இந்துருவ ரயில் பாதை திருத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை அரச ஊழியர்களுக்கான மேற்படி நேரச் சலுகை வழங்கப்படவுள்ள தெனவும் அமைச்சு மேலும் தெரிவித்தது. (எஸ்.டி.எம்.ஐ)




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...