இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் எழுப்பிய குற்றச்சாட்டுகள் பற்றி ஐ.நா. சபையின் பொதுக்குழுவில் விவாதிக்க சாத்தியக்கூறு இல்லை என்று ஐ.நா.வூக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக மிகவூம் மோசமான முறையில் தாக்குதல் நடந்திருப்பதாகவூம்- கடுமையான மனித உரிமை மீறல் நடந்திருப்பதாகவூம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரடியாகவே குற்றம்சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயல்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தன.
ஐ.நா. சபை பொதுக்குழுக் கூட்டம் தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் நியூயோர்க் சென்றிருக்கிறார்கள். ஐ.நா. சபையின் கூட்டத்தில் இந்திய நிலைப்பாடு பற்றியூம்- பொதுக்குழு விவாதிக்க உள்ள பிரச்னைகள் பற்றியூம் பத்திரிகையாளர்களுக்கு விளக்கினார் ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி.
ஐ.நா. சபையின் பொதுக்குழு என்பது வேறு- ஜெனீவாவில் இருக்கும் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடு வேறு.
ஐ.நா. சபையின் அங்கமாக மனித உரிமை ஆணையம் இருந்தாலும் அந்த ஆணையத்தின் அறிக்கைகளும் முடிவூகளும் ஐ.நா.வின் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வேண்டிய கட்டாயம் இல்லை.
பெருவாரியான உறுப்பினர் நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை பற்றி விவாதிக்க வேண்டுகோள் விடுத்தால் மட்டுமே பொதுக்குழுவில் அந்த விவகாரம் பற்றிய விவாதம் எடுத்துக்கொள்ளப்படும். அதற்கும்கூட முன்னமேயே அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
மேலும்- வேறு எந்த நாடும் இந்தப் பிரச்னையில் நேரடியாக அக்கறை காட்டாத நிலையில் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் பற்றியோ அவர்களது மறுவாழ்வூ பற்றியோ பிரச்னை எதுவூம் எழுப்பப்படும் சாத்தியமே கிடையாது என்று ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேசும்போது 95 சதவிகிதம் தமிழர்கள் சகஜவாழ்வூக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவித்திருப்பதாலும்- இந்தியாவூம் ஈழத் தமிழர் பிரச்னையில் மௌனம் சாதிப்பதாலும் ஈழத் தமிழர் பிரச்னையோ- இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் பற்றியோ தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. சபையின் பொதுக்குழு விவாதிக்காது என்று தெரிகிறது.(எம்.ரி.977)







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...