மட்டு நகருக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய தனியார் பஸ் நிலையம் ஒன்றினை அமைப்பதற்கான ஆரம்ப வேலைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று ஆரம்பித்து வைத்தார்.
இதற்கான முதற்கட்ட வேலைக்காக அவரது நிதியிலிருந்து சுமார் 50லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஆண்டு காலங்களாக தனியார் பஸ் நிலையம் ஒன்று இல்லாமல் மக்கள் பெரிதும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இதனை கருத்திற்கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது நிதி ஓதுக்கீட்டின் மூலம் இந்த நவீன பஸ் நிலையத்தை அமைக்க முடிவு செய்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் மட்டக்களப்பு பிரதி மேயர் ஜோர்ச்பிள்ளை ஆகியோர்கள் கலந்து கொண்டனர். (எம்.ரி.977)








ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...