இலங்கையில் இயற்கை எரிவாயு வயல்கள் இருப்பது முதற்தடவையாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று காலை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்- எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனமொன்று இன்று காலை தனக்கு இத்தகவலை அறிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை-இலங்கையின் மன்னார் கடற்பரப்பில் எரிவாயு வயல்கள் காணப்படுவதாக கெயிரின் இந்திய நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கையானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் அறிவிப்பினை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
மேலும்இ 1354 மீற்றர் வரை ஆழம் வரை துளையிட்டதில் எரிவாயு வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வணிக நோக்கத்திற்கு இன்னமும் ஆழ்ந்து துளையிடப்பட வேண்டும் என குறித்த நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. (எம்.ரி.977)




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...