அடுத்த வருடம் நடத்தத் திட்டம்
அரசாங்கம் வடமாகாண சபைக்கான தேர்தலை அடுத்த வருடம் நடத்தத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மீள்கட்டுமானப் பணிகளும் மக்களின் வாழ்வாதாரக் கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருவதால் வடக்கின் தேர்தலை அடுத்தாண்டு வரை ஒத்தி வைத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஊடக நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை யும் பத்திரிகை ஆசிரியர்க ளையும் நேற்று (28) அலரி மாளிகையில் சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். (எஸ்.டி.எம்.ஐ.09.30)
