பொலிஸ் மா அதிபர் தகவல்
மர்ம மனிதர்களாக போலி நாடகமாடிய 200 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டிருக்கும் அனைவரும் ஆண்கள். உண்மையில் இவர்கள் பேயோ பூதமோ அல்லது மர்ம மனிதர்களோ இல்லை.
மக்களால் சித்தரிக்கப்பட்டிருக்கும் மர்ம மனிதன் எனும் நாமத்தை சாதகமாகப் பயன்படுத்தி திருடர்களும் கொள்ளையர்களும் வெண்சந்தன மரக் கடத்தல்காரர்களுமே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கஞ்சா போதைப்பொருள் பாவனையாளர்களும் காமவெறியர்களும் இதனை சாதகமாகக் கொண்டு பெண்களுடனான சேஷ்டைகளை அதிகரித்துள்ளனர். இவ்வாறானவர்களையே நாம் கைதுசெய்து தடுத்துவைத்துள்ளோம்.
தற்போது பரவலாகப் பேசப்பட்டுவரும் இந்த மர்ம மனிதர்களை முற்றாக ஒழிக்கவேண்டுமாயின் முதலில் எமது மக்களின் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
மர்ம மனிதர்களோ பூதங்களோ அல்லது பேய்களோ இங்கு நடமாடவில்லை என்பதை அவர்கள் மனப்பூர்வமாக நம்ப வேண்டும். இதற்காக நாம் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்திவருகின்றோம் என்றார்.(எ.ஸ்.டி.எம்.ஐ.)
