யானைகளின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் தெரியும்!

elephant-1வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி தகவல்

நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட காட்டுயானைகளை கணக்கெடுக்கும் பணிகள் நேற்றைய தினம்  சிறந்த முறையில் நிறைவடைந்துள்ளதாகவும் இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்றும்  வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி எம்.டி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த பணிகளுக்காக 4 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஈடுப்படுத்தப்பட்டதாக அமைச்சர் எஸ் எம் சந்திர சேன தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு உதவியாக பாதுகாப்பு படையினரும்- அரச சார்பற்ற நிறுவன பணியாளர்களும்  ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில்- காட்டு யானைகள் கணக்கெடுப்புக்கள் தொடர்பான முழு விபரங்களுடனான இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.(எம்.ரி.-977)

elephant-2

elephant-3

 

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011 15:33 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது