அமைச்சர் பஷில் ராஜபக்ஷவால் கையளிப்பு
வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 618 வீடுகள் மீள்குடியேறியவர்களுக்கு நேற்று உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
வவுனியா மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி யுதவியுடன் 518 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் செல்வபுரத்தில் நோர்வே அர சாங்கத்தின் நிதியுதவியுடன் 100 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் செட்டிக்குளம் மெனிக்பாம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 100 வீடுகளையும் முல்லைத்தீவு செல்வபுரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகளையும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக வீட்டுரி மையாளர்களுக்குக் கையளித்தார். (எஸ்.டி.எம்.ஐ)
