இலங்கைக்கும் சீனாவூக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஊடக பங்களிப்பை வழங்கிய தகவல் திணைக்களத்தின் பணிபாளர் வசந்த பிரிய ராமநாயக்க பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
கொழும்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மக்கள் சீனக்குடியரசின் 62 ஆவது தேசிய தினம் தொடர்பான வைபவத்தின்போதே அவர் கௌரவிக்கப்பட்டார்.
இலங்கை- சீன சமூக-கலாசார ஒத்துழைப்பு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படடிருந்த இந்த வைபவத்துக்கு பிரதமர் தி.மு. ஜயரத்ன பிரதம அதிதியாகவூம் இலங்கைக்கான சீனத் தூதுவர் விசேட அதிதியாகவூம் கலந்துகொண்டார். (எம்.ரி.-977)

